Saturday, September 10, 2011

தண்டனை


கத்தி யின்றி ரத்த மின்றி
நரக வேதனை
புத்தி உண்டு சித்தி உண்டு
மீள தோனலை

கள் நெஞ்சு அது கொய்து
உள்ளே சென்றாய்
என் இதயம் அதை சென்று
நீயும் பிடித்தாய்

மௌன மாக நீ நடக்க
நானும் ரசித்தேன்
கொஞ்சம் கடந்து எனை சென்று
திரும்பி சிரித்தாய்

உன் சிரிப்பை காதல் என
நானும் நினைத்தேன்
அதை கலைத்து நட்பு என
நீயும் உரைத்தாய்

என் தனிமையில் உன் நினைவுகள்
நாளும் வருகுதே
உனைப் பிரிந்து என் மனது
நாளும் வாடுதே

இந்த ஜீவன் இனி எதற்கு
எண்ணம் தோன்றுதே
உனை மறந்து நான் வாழ
எனக்கு தெரியலை

நான் வாழ உனைக் கொன்றேன்
என் இதயத்தில்
உனைக் கொன்ற என் இதயத்துக்கு
ஏது தண்டனை...................

1 comment: