கத்தி யின்றி ரத்த மின்றி
நரக வேதனை
புத்தி உண்டு சித்தி உண்டு
மீள தோனலை
கள் நெஞ்சு அது கொய்து
உள்ளே சென்றாய்
என் இதயம் அதை சென்று
நீயும் பிடித்தாய்
மௌன மாக நீ நடக்க
நானும் ரசித்தேன்
கொஞ்சம் கடந்து எனை சென்று
திரும்பி சிரித்தாய்
உன் சிரிப்பை காதல் என
நானும் நினைத்தேன்
அதை கலைத்து நட்பு என
நீயும் உரைத்தாய்
என் தனிமையில் உன் நினைவுகள்
நாளும் வருகுதே
உனைப் பிரிந்து என் மனது
நாளும் வாடுதே
இந்த ஜீவன் இனி எதற்கு
எண்ணம் தோன்றுதே
உனை மறந்து நான் வாழ
எனக்கு தெரியலை
நான் வாழ உனைக் கொன்றேன்
என் இதயத்தில்
உனைக் கொன்ற என் இதயத்துக்கு
ஏது தண்டனை...................
no words to appreciate it
ReplyDelete