Monday, November 28, 2011

செய்தாய்


வெறும் மரமாக நான் இருந்தேன்
என்னை செதுக்கி குழலும் செய்தாய்
வெறும் குழலாக நான் இருந்தேன்
காற்றைச் செலுத்தி ஜீவன் தந்தாய்

வெறும் இசையாக நான் இருந்தேன்
வரிகள் சேர்த்து பாட்டு ஆக்கினாய்
வாய்ப் பாட்டு ஆகி நின்றேன்
ஆடல் சேர்த்து பாடல் ஆக்கினாய்

தெருக் கூத்தாக நானும் நின்றேன்
எனை இயக்கி திரைப்படம் ஆக்கினாய்
திரைப்படம் நான் என்றால் என்றும்
எந்தன் கதாநாயகி நீ அல்லவா

வாழ்க்கை


தீண்டா தேகம்
மாசற்ற மனது
தேடும் வாழ்வில்
புலி மானை திண்ண
நான் சைவம் என
ஏங்கும் மான்

Friday, November 25, 2011

பிரியம்


பிரியமான உன் முத்தம்
என் சோகத்தையும்
உறுஞ்சியதே

Thursday, November 24, 2011

குணம்


பருந்து பறக்குது மேலே
அதன் பார்வை கீழே
குணம் படைத்தவன் மேலே
அவன் பாதம் தரையிலே

சினம் கொண்டவன் வேகம்
கால்கள் இடருமே
சீர் கொண்ட வேகம்
அது வேண்டுமே

கஷ்டம் அது
கானல் நீர்
காணாமல் போகும்
உந்தன் கண்ணீர்

Wednesday, November 23, 2011

பார்வை


தீண்டாமல் தீண்டும்
உந்தன் பார்வை
இமை தாண்டாமல் ஓடும்
உந்தன் விழியும்
சொல்லாமல் சொல்லும்
ஆயிரம் கவிதை
கேளாமல் கேட்கும்
உந்தன் பேச்சை
ஆடாமல் நின்று
எந்தன் கண்கள்....

Tuesday, November 22, 2011

Missed Call



திராட்சைக்காக குதிக்கும் நரி போல
எடுப்பாயோ என
நான் விடும் missed call……..

ஏதோ


என்னை சுற்றி
இயங்கும் நான்
உன்னை சுற்றி
வாழ்கிறேன்

என் வாழ்வில்
ஒளி வீசுகிறாய்
கொஞ்ச நேரம்
மறைந்து நடிக்கிறாய்

பின் கொஞ்சம்
தலை காட்டி
உதித்து சிரிக்கிறாய்

உன்னால் நான் வாழ
உனை தொலைவில்
ரசிக்கும் நான்....

இளமையில் வறுமை


மொட்டு சிரிக்குது
மகிழ்ச்சி கொள்ளுது
சோகம் அறியவில்ல

வண்டு அரும்பிலே
உள்ள நுழைஞ்சத
அது உணரவில்ல

வண்டு கொடஞ்ச
பழம் இனிக்கும்
அதுவும் நெசம்தானே

என்ன கஷ்டம்
என் புள்ளைக்கிங்க
இதுவும் பாசம்தானே...

Tuesday, November 15, 2011

இங்கேது


காற்று இல்லாமல் போனால்
வாசம் இங்கேது
காதல் இல்லாமல் போனால்
சுவாசம் இங்கேது

கடல்கள் இல்லாமல் போனால்
அலைகள் இங்கேது
காதல் இல்லாமல் போனால்
கலைகள் இங்கேது

வானம் இல்லாமல் போனால்
நீலம் இங்கேது
காதல் இல்லாமல் போனால்
ஜீவன் எனக்கேது

மரங்கள் இல்லாமல் போனால்
மழையும் இங்கேது
மனங்கள் இணையாமல் போனால்
காதலும் இங்கேது....

Monday, November 14, 2011

என்ன சொல்ல


வெற்றியின் கண்ணீர்
தோல்வியில் புன்னகை
எதிரிக்கும் ஈகை
எதிர்பார்ப்பில்லா அன்பு
பிறர்க்காக தியாகம்
பிரிந்துசேரும் சிலதுளி மௌனம்
என்ன சொல்ல
அதை நான்
என்ன சொல்ல

கண்கள் இல்லாதவன் ஓவியம்
காது கேளாதவன் இசை
கைகள் இல்லாதவன் சிற்பம்
கால்கள் இல்லாதவன் நாட்டியம்
அரிதாரம் அற்ற ஆட்டம்
சுருதி இல்லாத நாடோடி பாட்டும்
ஒப்பனை இல்லை
இது சத்திய உண்மை

Saturday, November 5, 2011

இழப்பு


பூவின் மணம் இழந்தால் சருகு
மனிதனின் குணம் இழந்தால் மிருகம்
பேச்சை இழந்தால் ஊமை
பேச்சுரிமை இழந்தால் அடிமை
உறுப்பை இழந்தால் ஊனம்
உரிமை இழந்தால் ஈனம்
பெற்றோரை இழந்தால் அனாதை
உற்றோரை இழந்தால் பரதேசி
கல்வியை இழந்தால் அறிவில்லை
காதலை இழந்தால் உயிரில்லை
இழந்தோம் என இல்லாமல்
வாழ்ந்தோம் என பறைசாற்ற
இழக்காமல் இரு நம்பிக்கை
வெல்வோம் என்றும் இது என் கை......