மனதில் நிற்க்கும் வார்த்தை
அது வெளியில் வந்தால் வாழ்க்கை
கானக் குயில்கள் கெஞ்சும்
உன் மௌனம் கலைய கொஞ்சம்
வார்த்தை பேசும் விழிகள்
அது விழிகள் அல்ல மொழிகள்
கைகள் மெல்ல அலையும்
அந்த அலைவு எந்த கலையோ
கால்கள் எழுப்பும் ஓசை
மனிதன் எழுதிடாத பாஷை
கவிஞன் சொல்லா கவிதை
மௌனம் சொல்லும் ஒரு கதை
பிரியம் உண்டு என்மீது
புரிந்து கொண்டேன் இப்போது