Friday, May 31, 2013

தருணம்


ஆயுள் தண்டனை வேண்டாம் கண்ணே
மரண தண்டனை போதும்
சில நொடிகள் வாழ்ந்தால் போதும்
உன் மடியில் மட்டும் பெண்ணே

உன் மௌனம் எனை கொல்லும்
கூறு தீட்டிய ஆயுதம்
துப்பாக்கி இல்லையா
ஒரு நொடியில் கொல்ல

உன் மௌனம் என் சாபம்
விமோசனம் எங்கே
விடை அறிந்தும் கேள்வி கணையோடு
உந்தன் முன் இங்கே

உன் பேச்சை நான் கேட்டேன்
சில நூறு நிமிடம்
உன் பேச்சை நான் கேட்பேன்
பல கோடி வருடம்

வரம் என்று நீ வந்தாய்
என்னோடு நட்பு கொண்டு
வரன் என்று நான் ஆனேன்
உன் கழுத்தில் தாலி கட்ட

என் சிந்தனை உன் வெளிப்பாடு
என்று மட்டும் உண்டு
உன் சிந்தனை எனை ஆட்கொண்டு
என்றோ சென்ற பின்பு

என் உலகம் உன் உலகம்
ஆகியது என்றோ
உன் உலகமும் உனக்கு வேண்டும்
தவிப்போடு என்றும்

சரியோ தவறோ தெரியாது
உன் மனதிற்கு அது புரியாது
பிரிவில் இல்லையடி சந்தோஷம்
நீ அருகில் வேண்டுமடி எப்போதும்

என்னை விட்டு நீங்காதே
என் உயிரே
நீ போனால் நான் துறப்பேன்
என் உயிரை

Saturday, May 25, 2013

எது உண்மை


பிறர் உரைத்து நாம் உணர்ந்த ஒன்றா
நம் கண்கள் கண்ட ஒன்றா
நம் உள்ளுணர்வின் வெளிப்பாடா
நம் செவிகள் கேட்ட ஒன்றா
எதுவோ

ஒலி அனைத்தும் கேட்க முடியுமா
காட்சிகள் அனைத்தும் காண முடியுமா
உள்ளுணர்வு சரிதானா
உள்ளம் தேடுவதால் மெய்யாகுமா

கண்கள் காணும் பூபாளம்
செவிகள் அறிய இயலாது
செவிகள் கேட்கும் வானொலி
காட்சிகள் இல்லை

வௌவால் ஓசை கேட்க இயலுமா
நான்காம் கோணத்தை கண்கள் காணுமா
மனதிற்கு சூது விளங்குமா
உண்மை சொல்வதுதான் உள்ளுணர்வோ

பாலில் உள்ள தண்ணீர் அறியா
கண்ணும் செவியும்
அறிய உதுவும் சுவை
ஆய்வின் விளைவா

நாம் கண்ட காட்சியின் பிளவு
நம் செவிக்கு எட்டிய ஓசையின் விளைவு
நம் ஆய்வின் முடிவு
நம் மனம் நாடும் ஒன்று
அதுவே

உண்மை என்று நாம் வகுக்கிறோம்
சரியோ தவறோ தெரியாது
பின் ஒரு வாதம் வரும் வரை
பின்னதொரு ஆய்வில்
நம் மனதிற்குள் உண்மை