Sunday, December 11, 2011

தமிழ் எழுத்துக்கள்


அறிவு வேண்டும் ஆராய
ஆக்கம் வேண்டும் செயல்படுத்த
இனிமை வேண்டும் எடுத்துரைக்க
ஈகை வேண்டும் இன்பமுற
உழைப்பு வேண்டும் வெற்றிபெற
ஊக்கம் வேண்டும் முன்னேற
எண்ணம் வேண்டும் நலமாக
ஏற்றம் வேண்டும் குணமாக
ஐயம் வேண்டும் கடமையில்
ஒழுக்கம் வேண்டும் உயர்வில்
ஓதல் வேண்டும் பொழுதில்
ஔதாரியம் வேண்டும் தோல்வியில்

Monday, November 28, 2011

செய்தாய்


வெறும் மரமாக நான் இருந்தேன்
என்னை செதுக்கி குழலும் செய்தாய்
வெறும் குழலாக நான் இருந்தேன்
காற்றைச் செலுத்தி ஜீவன் தந்தாய்

வெறும் இசையாக நான் இருந்தேன்
வரிகள் சேர்த்து பாட்டு ஆக்கினாய்
வாய்ப் பாட்டு ஆகி நின்றேன்
ஆடல் சேர்த்து பாடல் ஆக்கினாய்

தெருக் கூத்தாக நானும் நின்றேன்
எனை இயக்கி திரைப்படம் ஆக்கினாய்
திரைப்படம் நான் என்றால் என்றும்
எந்தன் கதாநாயகி நீ அல்லவா

வாழ்க்கை


தீண்டா தேகம்
மாசற்ற மனது
தேடும் வாழ்வில்
புலி மானை திண்ண
நான் சைவம் என
ஏங்கும் மான்

Friday, November 25, 2011

பிரியம்


பிரியமான உன் முத்தம்
என் சோகத்தையும்
உறுஞ்சியதே

Thursday, November 24, 2011

குணம்


பருந்து பறக்குது மேலே
அதன் பார்வை கீழே
குணம் படைத்தவன் மேலே
அவன் பாதம் தரையிலே

சினம் கொண்டவன் வேகம்
கால்கள் இடருமே
சீர் கொண்ட வேகம்
அது வேண்டுமே

கஷ்டம் அது
கானல் நீர்
காணாமல் போகும்
உந்தன் கண்ணீர்

Wednesday, November 23, 2011

பார்வை


தீண்டாமல் தீண்டும்
உந்தன் பார்வை
இமை தாண்டாமல் ஓடும்
உந்தன் விழியும்
சொல்லாமல் சொல்லும்
ஆயிரம் கவிதை
கேளாமல் கேட்கும்
உந்தன் பேச்சை
ஆடாமல் நின்று
எந்தன் கண்கள்....

Tuesday, November 22, 2011

Missed Call



திராட்சைக்காக குதிக்கும் நரி போல
எடுப்பாயோ என
நான் விடும் missed call……..

ஏதோ


என்னை சுற்றி
இயங்கும் நான்
உன்னை சுற்றி
வாழ்கிறேன்

என் வாழ்வில்
ஒளி வீசுகிறாய்
கொஞ்ச நேரம்
மறைந்து நடிக்கிறாய்

பின் கொஞ்சம்
தலை காட்டி
உதித்து சிரிக்கிறாய்

உன்னால் நான் வாழ
உனை தொலைவில்
ரசிக்கும் நான்....

இளமையில் வறுமை


மொட்டு சிரிக்குது
மகிழ்ச்சி கொள்ளுது
சோகம் அறியவில்ல

வண்டு அரும்பிலே
உள்ள நுழைஞ்சத
அது உணரவில்ல

வண்டு கொடஞ்ச
பழம் இனிக்கும்
அதுவும் நெசம்தானே

என்ன கஷ்டம்
என் புள்ளைக்கிங்க
இதுவும் பாசம்தானே...

Tuesday, November 15, 2011

இங்கேது


காற்று இல்லாமல் போனால்
வாசம் இங்கேது
காதல் இல்லாமல் போனால்
சுவாசம் இங்கேது

கடல்கள் இல்லாமல் போனால்
அலைகள் இங்கேது
காதல் இல்லாமல் போனால்
கலைகள் இங்கேது

வானம் இல்லாமல் போனால்
நீலம் இங்கேது
காதல் இல்லாமல் போனால்
ஜீவன் எனக்கேது

மரங்கள் இல்லாமல் போனால்
மழையும் இங்கேது
மனங்கள் இணையாமல் போனால்
காதலும் இங்கேது....

Monday, November 14, 2011

என்ன சொல்ல


வெற்றியின் கண்ணீர்
தோல்வியில் புன்னகை
எதிரிக்கும் ஈகை
எதிர்பார்ப்பில்லா அன்பு
பிறர்க்காக தியாகம்
பிரிந்துசேரும் சிலதுளி மௌனம்
என்ன சொல்ல
அதை நான்
என்ன சொல்ல

கண்கள் இல்லாதவன் ஓவியம்
காது கேளாதவன் இசை
கைகள் இல்லாதவன் சிற்பம்
கால்கள் இல்லாதவன் நாட்டியம்
அரிதாரம் அற்ற ஆட்டம்
சுருதி இல்லாத நாடோடி பாட்டும்
ஒப்பனை இல்லை
இது சத்திய உண்மை

Saturday, November 5, 2011

இழப்பு


பூவின் மணம் இழந்தால் சருகு
மனிதனின் குணம் இழந்தால் மிருகம்
பேச்சை இழந்தால் ஊமை
பேச்சுரிமை இழந்தால் அடிமை
உறுப்பை இழந்தால் ஊனம்
உரிமை இழந்தால் ஈனம்
பெற்றோரை இழந்தால் அனாதை
உற்றோரை இழந்தால் பரதேசி
கல்வியை இழந்தால் அறிவில்லை
காதலை இழந்தால் உயிரில்லை
இழந்தோம் என இல்லாமல்
வாழ்ந்தோம் என பறைசாற்ற
இழக்காமல் இரு நம்பிக்கை
வெல்வோம் என்றும் இது என் கை......

Wednesday, October 19, 2011

துணை


தோழியே என் தோள்கள் இருந்தும்
உனை சாய்க்க முடியவில்லை
என் கைகள் இருந்தும்
உன் கண்ணீர் துடைக்க முடியவில்லை
விரல்கள் அனுப்பும்
இச்செய்தி என் துணையாக உன்னிடம்......

Friday, October 14, 2011

உயிர்



நிலவென்றேன் உனை
முகில் கொண்டு
முகம் மறைக்கிறாய்

நினைவென்றேன் உனை
கனவில் வந்து
எனை சாய்க்கிறாய்

மழையென்றேன் உனை
பூபாலமாய் வானில்
ஜாலங்கள் செய்கிறாய்

மின்னலென்றேன் உனை
புன்னகைத்து
பற்கள் காட்டுகிறாய்

பீத்தோவனின் சிம்போனி என்றேன் உனை
நீ சிரித்து
உன் குரல் ஒலிக்கிறாய்

உயிர் என்கிறேன் உனை
உன் இதயம் தனில்
ஒரு குடில் தருவாயோ......

Female:
உயிர் என்று நீ
எனை சொன்ன போது
என்ன நான் சொல்வேன்
என் உயிரோடு......

Saturday, October 1, 2011

தோழி

என் பாரம்
அதை தாங்க
பல தோள்கள்
இருந்தும்

என் சோகம்
நான் உரைப்பேன்
உன் மடிமீது
சாய்ந்து

தலை கோதி
நீ கேட்பாய்
உம் என்று
சொல்லி

என் பாரம்
அது குறையும்
என் னென்று
சொல்ல

உன் துயில் கலைத்து
நான் உரைப்பேன்
பல நூறு கதைகள்
என் துயில் கலைய
காத்திருப்பாய்
உன் கதை கூற

தோழியாக நீ கிடைத்தாய்
கடவுள் தந்த வரமோ
வரம் கிடைத்த பக்தன் நான்
வேறு என்ன கூற......

Friday, September 23, 2011

நிச்சயதார்த்தம்



மாலை மாற்றி
நமக்கு நிச்சயதார்த்தம்
நாளை தானடி
உன் குங்குமஏற்றம்

என் வாசலில்
உனக்கு ஆரத்தி
என்னோடு வா
நீ சீமாட்டி

அம்மா உன்னை
கொஞ்சி பேணுவாள்
அப்பா உன்னை
மகளென போற்றுவார்

அன்பே என்று
நானும் அழைப்பேன்
கண்ணே நீயும்
என்னோடு வந்தாள்

உன் வீட்டில்
நீ யுவராணி
என் வீட்டில்
நீ மகராணி

உன் விரல்
தலைகோத வேண்டும்
உன் நகம்
தேகம் தீண்ட வேண்டும்

இதழ்கள் விருந்துகள்
பரிமாற வேண்டும்
பற்களும் கொஞ்சம்
பசி யார வேண்டும்

நாவும் மெல்ல
நாட்டியம் ஆட
வளையல் மெட்டி
ஓசை எழுப்ப


நெஞ்சில் ஒரு
லப்டப் சத்தம்
பஞ்சும் நெருப்பும்
அக்கம் பக்கம்

கடிகார முள்போல
நாமும் இணைய
அச்சம் தேவையில்லை
மிச்சம் களைய

Wednesday, September 21, 2011

மனைவி


என் இம்சைகளும்
அக்கறை
என்ற உனக்கு
என் அக்கறையும்
இம்சை
ஆனது ஏன்...

பத்து நாள் என்
வருகை
காத்திருந்த நீ
பத்து நிமிடம்
எனக்காக
வர நேரமில்லை

Cell’ல் message உம்
Gtalk’ல் chatting உம்
மணிக்கணக்கில் அன்று
பேச கூட நேரமில்லை இன்று


அன்பே
நான் அறிவேன்
நீ செய்வது
எல்லாம் எனக்காக என்று
இருந்தும்
மனம் உன்னையே நாடுது
உன் வாசம் தேடுது.....

Saturday, September 10, 2011

தண்டனை


கத்தி யின்றி ரத்த மின்றி
நரக வேதனை
புத்தி உண்டு சித்தி உண்டு
மீள தோனலை

கள் நெஞ்சு அது கொய்து
உள்ளே சென்றாய்
என் இதயம் அதை சென்று
நீயும் பிடித்தாய்

மௌன மாக நீ நடக்க
நானும் ரசித்தேன்
கொஞ்சம் கடந்து எனை சென்று
திரும்பி சிரித்தாய்

உன் சிரிப்பை காதல் என
நானும் நினைத்தேன்
அதை கலைத்து நட்பு என
நீயும் உரைத்தாய்

என் தனிமையில் உன் நினைவுகள்
நாளும் வருகுதே
உனைப் பிரிந்து என் மனது
நாளும் வாடுதே

இந்த ஜீவன் இனி எதற்கு
எண்ணம் தோன்றுதே
உனை மறந்து நான் வாழ
எனக்கு தெரியலை

நான் வாழ உனைக் கொன்றேன்
என் இதயத்தில்
உனைக் கொன்ற என் இதயத்துக்கு
ஏது தண்டனை...................

Wednesday, September 7, 2011

முத்தம்


முகிலின் முத்தம் மழை
உளியின் முத்தம் சிலை
கதிரவனின் முத்தம் காலை
மதியின் முத்தம் மாலை
கடலின் முத்தம் அலை
கவியின் முத்தம் கலை
கதையின் முத்தம் அந்தம்
காவியத்தின் முத்தம் ஆனந்தம்
இதழில் முத்தம் காமம்
இதயத்தில் முத்தம் காதல்...

Wednesday, August 24, 2011

Omane


ormikkan ninte ormakal
snehikkan ende sneham
jeevikanum ninnodu jeevitham
yajikan ende omane...........

கனாவிலே நீ


ஒரு ஜீவன் துடிக்குது
காதலை எண்ணி தவிக்குது
காதல் நவரசம்தானே
காதலி பாதரசமாக

ஒட்டி ஒட்டாமல் போவதும் ஏனோ
கண்காட்டி ஜாடைகள் செய்வதும் ஏனோ
மின்மினி பூச்சிக்கு தேவை இல்லை விளக்கு
கண்ணே பூச்சுகள் தேவை இல்லை உனக்கு

காற்றில் வருகுது கீதம்
உன் குரலாய்
தலை கோதுது
உன் விரலாய்
மலர் சூடிடும் முகையே
மெய் மறந்தேன் எனையே

சலங்கை ஒலிகள் கொஞ்சும்
மனம் மயங்குது கொஞ்சம்
நீ சிரித்திடும் போது
எனை மறக்கிறேன் மாது

உன் முகம் அது தெரியாது
என் மனதுக்கு இது புரியாது
வினாவிலே நீ யாரென
கனாவிலே நான்......

Wednesday, August 17, 2011

வண்ணம்


வானவில்லிற்கு வண்ண முண்டு
பிடிக்க முடியாது
லட்சியகனவிற்கு வண்ண மில்லை
உடைக்க முடியாது
வண்ணத்தில் இல்லையடா வாழ்வு
எண்ணத்திலே உண்டு

Monday, August 15, 2011

இந்தியா


என் தேசம்
என் வாசம்
இவ்விடத்தில்
என் சுவாசம்

கொடி பறக்கும்
புகழ் பறக்கும்
இவ்விடத்தில்
ஆன்மீகம் தளர்க்கும்

அண்ணல் காந்தியடிகள் உண்டு
அண்ணாமலை உண்டு
இவ்விடத்தில்
அன்பும் உண்டு

ஊழலை ஒழிப்போம்
லஞ்சத்தை அழிப்போம்
இவ்விடத்தில்
மனிதன் நேயம் காப்போம்

பார் நோக்கிட
பரணி காத்திட
இவ்விடத்தில்
புகழ் சேர்த்திட

வாழ்க இந்தியா
வளர்க இந்தியா
இவ்விடத்தில்
நின்பெயர் பெருக இந்தியனே..........

Sunday, August 7, 2011

Happy Friendship Day


Friendship is shadow
where ever the light be
it follow u

Even on the dark
its there with u
searching the reflection for u............

Wednesday, July 20, 2011

பூமியை வாழவிடு

ஞாயிறு விழி பட்டு கசிகிறேன்
உன் தாய் இன்று
ஓசோன் ஓட்டையால்

என் தேகம் தனைத் துளைக்காதே
நீ இன்று
ஆழ்குழாய் ஊசியால்

நஞ்சு உண்டு நான் வாழ்கிறேன்
ஆலை கழிவுகளால்
நெஞ்சம் உண்டோ
அது உனக்கு எனைக் காத்திடவே........

Sunday, July 10, 2011

Just like that






உன் காதல் சொல்ல வார்த்தை தேவை இல்லை
உன் மௌனம் ஒன்றே போதும்.......

No need of words to say your love, ur silence makes it.......



இரவு குறைந்தாலும் உறக்கம் வேண்டும்
என் நினைவு குறைந்தாலும் நீ வேண்டும்.......

Need sleep even on short nights
Need u even i lost sights.........

Friday, May 20, 2011

One Side Love


உன் கனவுகள் என் நினைவிலும்
உன் நினைவுகள் என் கனவிலும்
இன்றும் தொடருதே
இன்னும் தொடரவே....

Friday, May 6, 2011

தோழி


ரத்த பாசம் இல்லை
பித்த நேசம் இல்லை
சொந்தம் நீயும் இல்லை
பந்தம் எதுவும் இல்லை
SoBe My Friend


காதல்



என் நெஞ்சில் நீ
என் மனதில் நீ
என் கனவிலும் நீ தானே....

என் விழியும் நீ
என் இமையும் நீ
என் பார்வையும் நீ தானே...

என் உயிரும் நீ
என் நினைவும் நீ
என் வாழ்வெங்கும் நீ தானே....

நீதானே நீதானே....

துன்பம் அது வரும் தானே
இன்பம் அதிலும் நீ தானே
நீ இல்லை என்றால்
வாழ்வில் வீழ்வேனா
உன்னோடு இருந்தால்
வெற்றி கொள்வேனே.....