Tuesday, September 1, 2020

இசை

எழுத்து சொல் பொருள்  யாப்பு அணி

இலக்கணம் ஏதும் தெரியாது

கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு

திசைகள் சொல்ல தெரியாது

பத்துப்பாட்டு எட்டுத்தொகை

சங்க இலக்கியம் யானறியேன்

ரிக் யஜுர் சாம அதர்வண

நால்‌‌ வேதம் யானறியேன் 


தமிழ் தாய் உனை பாட

இவை‌யாவும் வேண்டுமா

பிழை இருந்தால் அது

மறைய இசை ஒன்று போதுமா



Saturday, August 29, 2020

மழலை

கவிதையும் சொற்கள் தேடுது

உன் மழலை மொழியினிலே

தமிழும் கொஞ்சம் தள்ளி ரசிக்கிது

உன் மழலை பேச்சையுமே 


ராஜாவின் ராகமும் ஸ்வரங்கள் கேக்குது

உன் மழலை சிரிப்பினிலே

என் கவிதையும் கிறுக்கலே

உன் கிறுக்கலின் கவிதையிலே


நிலவும் வெட்கித் தேயுது 

கொஞ்சம் உந்தன் அழகினிலே

உப்பு மூட்டையும் பாரமில்லை

உன்னை சுமக்கயிலே


உன் உச்சி முகர்ந்ததும் சோகமில்லை

என்தன் மனதினிலே

தத்தித் தாவுது நெஞ்சம்

உந்தன் நடையினிலே


தாரை ஆடிக் காற்றும் கொஞ்சம்

தென்றல் வீசுமாம்

உன்னை எட்டு எட்டி வைக்க

சொல்லி கொஞ்சி பேசுமாம்


தவழ்ந்து வரும் போது

பா(ர்) ரதமும் பார்குமாம்

நீ தரணி தொட்டு ஆழ

உன்னை வாழ்த்துமாம்










Monday, December 4, 2017

நெஞ்சம்

தத்தித் தாவுது நெஞ்சம்
தள்ளிப் போகுது கொஞ்சம்
தள்ளிப் போனதும் கெஞ்சும்
தேடும் இந்த நெஞ்சம்

கம்பன் வீட்டுக் கட்டுத் திண்ணை
கவிதை ஒன்றைச் சொல்ல
கவிதை திருடி இதயம் திருட
முனைவேன் நானும் மெல்ல

கவிதை சொல்லக் காத்து இருந்தேன்
பெண்ணே உன்னைக் கண்டதும்
ஐயோ கவிதை மறந்தேன் எனையும் தொலைந்தேன் 
உந்தன் கண்கள் கண்டதும்

Thursday, April 14, 2016

தனிமை



உன்னை அறிய ஓர் வாய்ப்பு
உனக்காக நீ எழுதும் ஒரு தீர்ப்பு
சரியோ தவறோ தெரியாது
தனிமை திரையில் புறம் தெரியாது

சினமும் குணமும் நமக்குள்ளே
உறவும் பிரிவும் நமக்குள்ளே
அன்பும் அழுகையும் நமக்குள்ளே
வேட்கையும் வேதனையும் நமக்குள்ளே

உயரிய சிந்தனை வளர்க்க போராடு
எதிர் வரும் வசைகளை தள்ளு காற்றோடு
நேற்றைய நினைவுகள் நெஞ்சோடு
ஏற்றம் தேவை இன்று உன்னோடு

தனிமை என்பது விலங்கிலும் இல்லை
மனிதன் ஒன்றும் விலங்கினம் இல்லை
தனிமை இனிமை உணர்ந்தவன் ஞானி
தனிமை வெறுமை உணர்பவன் சேதி

தனிமை வலிமை சிலநாள் மட்டும்
ஒற்றுமை வாழ்க்கை உணர்பவர்க்கு மட்டும்
தனிமைச் சிறையில் உல்லாசம் சிலநாள்
அன்புச் சங்கிலியின் வலிமை புரியாதவர்க்கு

பழமையும் வெறுமையும் மெல்ல அசைபோடும்
புதுமையும் ஞானமும் கொஞ்சம் பொறிதட்டும்
பொறியை ஜுவாலை ஆக்கி முன்னேற்றும்
தளர்ந்தாள் ஜுவாலையில் சாம்பல் தனிமை




Friday, May 31, 2013

தருணம்


ஆயுள் தண்டனை வேண்டாம் கண்ணே
மரண தண்டனை போதும்
சில நொடிகள் வாழ்ந்தால் போதும்
உன் மடியில் மட்டும் பெண்ணே

உன் மௌனம் எனை கொல்லும்
கூறு தீட்டிய ஆயுதம்
துப்பாக்கி இல்லையா
ஒரு நொடியில் கொல்ல

உன் மௌனம் என் சாபம்
விமோசனம் எங்கே
விடை அறிந்தும் கேள்வி கணையோடு
உந்தன் முன் இங்கே

உன் பேச்சை நான் கேட்டேன்
சில நூறு நிமிடம்
உன் பேச்சை நான் கேட்பேன்
பல கோடி வருடம்

வரம் என்று நீ வந்தாய்
என்னோடு நட்பு கொண்டு
வரன் என்று நான் ஆனேன்
உன் கழுத்தில் தாலி கட்ட

என் சிந்தனை உன் வெளிப்பாடு
என்று மட்டும் உண்டு
உன் சிந்தனை எனை ஆட்கொண்டு
என்றோ சென்ற பின்பு

என் உலகம் உன் உலகம்
ஆகியது என்றோ
உன் உலகமும் உனக்கு வேண்டும்
தவிப்போடு என்றும்

சரியோ தவறோ தெரியாது
உன் மனதிற்கு அது புரியாது
பிரிவில் இல்லையடி சந்தோஷம்
நீ அருகில் வேண்டுமடி எப்போதும்

என்னை விட்டு நீங்காதே
என் உயிரே
நீ போனால் நான் துறப்பேன்
என் உயிரை

Saturday, May 25, 2013

எது உண்மை


பிறர் உரைத்து நாம் உணர்ந்த ஒன்றா
நம் கண்கள் கண்ட ஒன்றா
நம் உள்ளுணர்வின் வெளிப்பாடா
நம் செவிகள் கேட்ட ஒன்றா
எதுவோ

ஒலி அனைத்தும் கேட்க முடியுமா
காட்சிகள் அனைத்தும் காண முடியுமா
உள்ளுணர்வு சரிதானா
உள்ளம் தேடுவதால் மெய்யாகுமா

கண்கள் காணும் பூபாளம்
செவிகள் அறிய இயலாது
செவிகள் கேட்கும் வானொலி
காட்சிகள் இல்லை

வௌவால் ஓசை கேட்க இயலுமா
நான்காம் கோணத்தை கண்கள் காணுமா
மனதிற்கு சூது விளங்குமா
உண்மை சொல்வதுதான் உள்ளுணர்வோ

பாலில் உள்ள தண்ணீர் அறியா
கண்ணும் செவியும்
அறிய உதுவும் சுவை
ஆய்வின் விளைவா

நாம் கண்ட காட்சியின் பிளவு
நம் செவிக்கு எட்டிய ஓசையின் விளைவு
நம் ஆய்வின் முடிவு
நம் மனம் நாடும் ஒன்று
அதுவே

உண்மை என்று நாம் வகுக்கிறோம்
சரியோ தவறோ தெரியாது
பின் ஒரு வாதம் வரும் வரை
பின்னதொரு ஆய்வில்
நம் மனதிற்குள் உண்மை

Monday, March 4, 2013

வினா


விடை அறியா கேள்வி தேடல்
வினாவை நோக்கி விடையின் மோதல்
எய்தவன் அறிவான் எய்யுமிடம்
கணைகள் அறியா புகுமிடம்
வெற்றி தோல்வி தெரியாது
சரியா தவறா புரியாது
வாழ்வும் சாவும் அறியாது
நாவும் ஆடும் புது கூத்து

விடை அறியா விளையாட்டு
விதி அறியும் எது கூற்று
மனம் வெல்லும் போராட்டம்
சினம் கானல் நீரோட்டம்
பூபாலம் நிலை அல்ல
பூவே நீ நிழல் அல்ல
சரி என்று நினைத்தேன் சரியன்று
தவறென்று உரைத்தாய் தவறன்று
பிரிதல் எல்லை இப்போது
புரிதல் உண்டு எப்போதும்