Monday, January 28, 2013

நிசி


நிசியில் ஒரு பசி
இது உணர்சிகளின் புரட்சி
மயக்கும் உன் கதப்பு
மங்கிய ஒளி பரப்பு

தயங்கும் உன் இதழ்கள்
வருடும் என் விரல்கள்
சில நேரம் மௌனம்
பின் மெல்லிய சலனம்

முன்பே கண்ட முகம் இது
இங்கே காணும் சுகம் பெரிது
வளையல் சப்தம் மௌனம் காக்க
அச்சம் கொஞ்சம் உச்சம் காட்ட

பேதை போல நீயும் நிற்க
மடந்தை என்றேன் பற்கள் பலக்க
அரிவை என்றாய் விழிகள் சுரக்க
குழந்தை என்றேன் என்றும் எனக்கு

ஆடை அணிகலன் வாங்கியதும் இல்லை
ஆசைக்கு வாசமலர் சூட்டியதும் இல்லை
அன்பும் அரவணைப்பும் என்றும் உண்டு
நட்பும் காதலும் இளைத்த நம்மோடு

இச்சை கொண்டு காது கடிக்க
கச்சை மெல்ல நானும் கலைக்க
பசி வந்திட பத்தும் பறக்கும்
ருசி என்பது நித்தம் இனிக்கும்

மெய் தனின் மேலே புலியின் பாய்ச்சல்
வைகறை வேலை குயிலின் கூச்சல்
கனவை கலைக்க மனதும் இல்லை
புரண்டேன் அவளின் நினைவோடு