நிசியில் ஒரு பசி
இது உணர்சிகளின் புரட்சி
மயக்கும் உன் கதப்பு
மங்கிய ஒளி பரப்பு
தயங்கும் உன் இதழ்கள்
வருடும் என் விரல்கள்
சில நேரம் மௌனம்
பின் மெல்லிய சலனம்
முன்பே கண்ட முகம் இது
இங்கே காணும் சுகம் பெரிது
வளையல் சப்தம் மௌனம் காக்க
அச்சம் கொஞ்சம் உச்சம் காட்ட
பேதை போல நீயும் நிற்க
மடந்தை என்றேன் பற்கள் பலக்க
அரிவை என்றாய் விழிகள் சுரக்க
குழந்தை என்றேன் என்றும் எனக்கு
ஆடை அணிகலன் வாங்கியதும் இல்லை
ஆசைக்கு வாசமலர் சூட்டியதும் இல்லை
அன்பும் அரவணைப்பும் என்றும் உண்டு
நட்பும் காதலும் இளைத்த நம்மோடு
இச்சை கொண்டு காது கடிக்க
கச்சை மெல்ல நானும் கலைக்க
பசி வந்திட பத்தும் பறக்கும்
ருசி என்பது நித்தம் இனிக்கும்
மெய் தனின் மேலே புலியின் பாய்ச்சல்
வைகறை வேலை குயிலின் கூச்சல்
கனவை கலைக்க மனதும் இல்லை
புரண்டேன் அவளின் நினைவோடு
Machi semma feeling po .. Super da :)
ReplyDeletethanks machi.......
ReplyDelete