பிறர் உரைத்து நாம் உணர்ந்த ஒன்றா
நம் கண்கள் கண்ட ஒன்றா
நம் உள்ளுணர்வின் வெளிப்பாடா
நம் செவிகள் கேட்ட ஒன்றா
எதுவோ
ஒலி அனைத்தும் கேட்க முடியுமா
காட்சிகள் அனைத்தும் காண முடியுமா
உள்ளுணர்வு சரிதானா
உள்ளம் தேடுவதால் மெய்யாகுமா
கண்கள் காணும் பூபாளம்
செவிகள் அறிய இயலாது
செவிகள் கேட்கும் வானொலி
காட்சிகள் இல்லை
வௌவால் ஓசை கேட்க இயலுமா
நான்காம் கோணத்தை கண்கள் காணுமா
மனதிற்கு சூது விளங்குமா
உண்மை சொல்வதுதான் உள்ளுணர்வோ
பாலில் உள்ள தண்ணீர் அறியா
கண்ணும் செவியும்
அறிய உதுவும் சுவை
ஆய்வின் விளைவா
நாம் கண்ட காட்சியின் பிளவு
நம் செவிக்கு எட்டிய ஓசையின் விளைவு
நம் ஆய்வின் முடிவு
நம் மனம் நாடும் ஒன்று
அதுவே
உண்மை என்று நாம் வகுக்கிறோம்
சரியோ தவறோ தெரியாது
பின் ஒரு வாதம் வரும் வரை
பின்னதொரு ஆய்வில்
நம் மனதிற்குள் உண்மை
No comments:
Post a Comment