உன்னை அறிய ஓர் வாய்ப்பு
உனக்காக நீ எழுதும் ஒரு தீர்ப்பு
சரியோ தவறோ தெரியாது
தனிமை திரையில் புறம் தெரியாது
சினமும் குணமும் நமக்குள்ளே
உறவும் பிரிவும் நமக்குள்ளே
அன்பும் அழுகையும் நமக்குள்ளே
வேட்கையும் வேதனையும் நமக்குள்ளே
உயரிய சிந்தனை வளர்க்க போராடு
எதிர் வரும் வசைகளை தள்ளு காற்றோடு
நேற்றைய நினைவுகள் நெஞ்சோடு
ஏற்றம் தேவை இன்று உன்னோடு
தனிமை என்பது விலங்கிலும் இல்லை
மனிதன் ஒன்றும் விலங்கினம் இல்லை
தனிமை இனிமை உணர்ந்தவன் ஞானி
தனிமை வெறுமை உணர்பவன் சேதி
தனிமை வலிமை சிலநாள் மட்டும்
ஒற்றுமை வாழ்க்கை உணர்பவர்க்கு மட்டும்
தனிமைச் சிறையில் உல்லாசம் சிலநாள்
அன்புச் சங்கிலியின் வலிமை புரியாதவர்க்கு
பழமையும் வெறுமையும் மெல்ல அசைபோடும்
புதுமையும் ஞானமும் கொஞ்சம் பொறிதட்டும்
பொறியை ஜுவாலை ஆக்கி முன்னேற்றும்
தளர்ந்தாள் ஜுவாலையில் சாம்பல் தனிமை
Super
ReplyDeleteNandri
Delete