Wednesday, August 24, 2011

கனாவிலே நீ


ஒரு ஜீவன் துடிக்குது
காதலை எண்ணி தவிக்குது
காதல் நவரசம்தானே
காதலி பாதரசமாக

ஒட்டி ஒட்டாமல் போவதும் ஏனோ
கண்காட்டி ஜாடைகள் செய்வதும் ஏனோ
மின்மினி பூச்சிக்கு தேவை இல்லை விளக்கு
கண்ணே பூச்சுகள் தேவை இல்லை உனக்கு

காற்றில் வருகுது கீதம்
உன் குரலாய்
தலை கோதுது
உன் விரலாய்
மலர் சூடிடும் முகையே
மெய் மறந்தேன் எனையே

சலங்கை ஒலிகள் கொஞ்சும்
மனம் மயங்குது கொஞ்சம்
நீ சிரித்திடும் போது
எனை மறக்கிறேன் மாது

உன் முகம் அது தெரியாது
என் மனதுக்கு இது புரியாது
வினாவிலே நீ யாரென
கனாவிலே நான்......

No comments:

Post a Comment