என் பாரம்
அதை தாங்க
பல தோள்கள்
இருந்தும்
என் சோகம்
நான் உரைப்பேன்
உன் மடிமீது
சாய்ந்து
தலை கோதி
நீ கேட்பாய்
உம் என்று
சொல்லி
என் பாரம்
அது குறையும்
என் னென்று
சொல்ல
உன் துயில் கலைத்து
நான் உரைப்பேன்
பல நூறு கதைகள்
என் துயில் கலைய
காத்திருப்பாய்
உன் கதை கூற
தோழியாக நீ கிடைத்தாய்
கடவுள் தந்த வரமோ
வரம் கிடைத்த பக்தன் நான்
வேறு என்ன கூற......
No comments:
Post a Comment