நிலவென்றேன் உனை
முகில் கொண்டு
முகம் மறைக்கிறாய்
நினைவென்றேன் உனை
கனவில் வந்து
எனை சாய்க்கிறாய்
மழையென்றேன் உனை
பூபாலமாய் வானில்
ஜாலங்கள் செய்கிறாய்
மின்னலென்றேன் உனை
புன்னகைத்து
பற்கள் காட்டுகிறாய்
பீத்தோவனின் சிம்போனி என்றேன் உனை
நீ சிரித்து
உன் குரல் ஒலிக்கிறாய்
உயிர் என்கிறேன் உனை
உன் இதயம் தனில்
ஒரு குடில் தருவாயோ......
Female:
உயிர் என்று நீ
எனை சொன்ன போது
என்ன நான் சொல்வேன்
என் உயிரோடு......
No comments:
Post a Comment