கவிதையும் சொற்கள் தேடுது
உன் மழலை மொழியினிலே
தமிழும் கொஞ்சம் தள்ளி ரசிக்கிது
உன் மழலை பேச்சையுமே
ராஜாவின் ராகமும் ஸ்வரங்கள் கேக்குது
உன் மழலை சிரிப்பினிலே
என் கவிதையும் கிறுக்கலே
உன் கிறுக்கலின் கவிதையிலே
நிலவும் வெட்கித் தேயுது
கொஞ்சம் உந்தன் அழகினிலே
உப்பு மூட்டையும் பாரமில்லை
உன்னை சுமக்கயிலே
உன் உச்சி முகர்ந்ததும் சோகமில்லை
என்தன் மனதினிலே
தத்தித் தாவுது நெஞ்சம்
உந்தன் நடையினிலே
தாரை ஆடிக் காற்றும் கொஞ்சம்
தென்றல் வீசுமாம்
உன்னை எட்டு எட்டி வைக்க
சொல்லி கொஞ்சி பேசுமாம்
தவழ்ந்து வரும் போது
பா(ர்) ரதமும் பார்குமாம்
நீ தரணி தொட்டு ஆழ
உன்னை வாழ்த்துமாம்
No comments:
Post a Comment