Friday, September 23, 2011

நிச்சயதார்த்தம்



மாலை மாற்றி
நமக்கு நிச்சயதார்த்தம்
நாளை தானடி
உன் குங்குமஏற்றம்

என் வாசலில்
உனக்கு ஆரத்தி
என்னோடு வா
நீ சீமாட்டி

அம்மா உன்னை
கொஞ்சி பேணுவாள்
அப்பா உன்னை
மகளென போற்றுவார்

அன்பே என்று
நானும் அழைப்பேன்
கண்ணே நீயும்
என்னோடு வந்தாள்

உன் வீட்டில்
நீ யுவராணி
என் வீட்டில்
நீ மகராணி

உன் விரல்
தலைகோத வேண்டும்
உன் நகம்
தேகம் தீண்ட வேண்டும்

இதழ்கள் விருந்துகள்
பரிமாற வேண்டும்
பற்களும் கொஞ்சம்
பசி யார வேண்டும்

நாவும் மெல்ல
நாட்டியம் ஆட
வளையல் மெட்டி
ஓசை எழுப்ப


நெஞ்சில் ஒரு
லப்டப் சத்தம்
பஞ்சும் நெருப்பும்
அக்கம் பக்கம்

கடிகார முள்போல
நாமும் இணைய
அச்சம் தேவையில்லை
மிச்சம் களைய

3 comments: